ஸ்ரீலங்கா அரசாங்கம் தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்தமைக்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் லிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் வழமை போலவே கொள்கை விளக்க உரை எதிர் வரும் 27ம் திகதி இடம்பெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் விடுதலைப் புலிகளின் கொள்கை பிரகடனம் எவ்வாறு வெளியிடப்படவுள்ளது என்பதை சர்வதேச சமூகமே ஆர்வத்துடன் எதிர்hபாhத்திருக்கின்றது.
இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பினை மகிந்த ராஜபக்ச வெளியிட்டால் கொள்கை விளக்க உரையில் தேர்தல் முடிவுகளை மாற்றும் விதமான சில முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என்று ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு அச்சமடைந்துள்ளது.
எனவே மாவீரர் தின உரை நிறைவடையும் வரை தேர்தல் அறிவிப்பினை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கம் மாவீரர் தின உரைக்கு முன்பாக தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டும் பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கொள்கை விளக்க உரையில் மாற்றங்ளை ஏற்படுத்தவும் விடுதலைப் புலிகள் தரப்பு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இம்முறை வெளியிடப்படவுள்ள விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்க உரையானது ஸ்ரீலங்காவின் நடைபெறவுள்ள எந்த தேர்தல் முடிவினையும் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாகவே இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர் கால் தமிழ் மக்களின் தெரிவுகள் குறித்து தெளிவான முடிவுகளை விடுதலைப்புலிகளி; மாவீரர் தின உரை பிரதிபலிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.