[வெள்ளிக்கிழமை, 22 மே 2009]
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பை சென்றடைவார் என அறிவிக்கப்படுகின்றது. போருக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்குப் பயணம் செய்யும் இவர், முகாம் நிலைமைகளையும் அங்குள்ள தேவைகள் தொடர்பாகவும் ஆராய்வார். அதன் பின்னர் முன்னர் 'பாதுகாப்பு வலயம்' என அழைக்கப்பட்ட போர்ப் பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று பார்வையிடுவார் எனவும் ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், பான் கீ மூனின் நிகழ்ச்சி நிரல், குறிப்பாக அவர் கொழும்பில் யார் யாரைச் சந்திப்பார் என்ற விபரங்கள் இதுவரையில் இறுதியாக்கப்படவில்லை எனவும் ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கின்றார்.
இருந்தபோதிலும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை அவர் சந்திப்பார் எனத் தெரிகின்றது.
Friday, May 22, 2009
பான் கீ மூன் இன்று கொழும்பு செல்கின்றார்: போர்ப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிடுகின்றார்
Friday, May 22, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.