[வியாழக்கிழமை, 28 மே 2009,]
வன்னியில் இடம் பெற்ற மோதல் காரணமாக காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொது மக்களில் 200 பேர் குணமடைவதற்கு முன் வவுனியா நான்புரி நிலையத்திற்கு அனுப்பும் நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை 26-05-2009 இடம் பெற்றுள்ளது.
இவ் விடையம் தொடர்பாக தெரிய வருகையில் ,
வன்னியில் இடம் பெற்று வரும் மோதல் காரணமாக சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுல் அங்கங்களை இழந்தவர்களும் உள்ளனர். இவர்கள் நன்கு குணமடையும் போது வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைப்பது வழமை . இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நன்கு குணமடைந்த மற்றும் குணமடையாத நடக்க முடியாத நோயாளர்கள் என சுமார் 200 பேர் வரை குணமடைந்ததாகக்கூரி சிங்கள வைத்தியர் ஒருவர் இவர்களை வவுனியா நலன் புரி நிலையங்களுக்கு அனுப்ப உறுதிப்படுத்தியுள்ளனர் .
இந்த நிலையில் குணமடையாத நோயாளர்கள் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்ப இருப்பது தொடர்பாக பொது மக்களினால் மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி ஏ.யூட்டன் உடனடியாக செயற்பட்டதினைத் தொடந்து நன்கு குணமடைந்தவர்கள் மட்டும் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 200 பேர் நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைப்பு
Lagt inn av
kavishan
Thursday, May 28, 2009
[வியாழக்கிழமை, 28 மே 2009,]
வன்னியில் இடம் பெற்ற மோதல் காரணமாக காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொது மக்களில் 200 பேர் குணமடைவதற்கு முன் வவுனியா நான்புரி நிலையத்திற்கு அனுப்பும் நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை 26-05-2009 இடம் பெற்றுள்ளது.
இவ் விடையம் தொடர்பாக தெரிய வருகையில் ,
வன்னியில் இடம் பெற்று வரும் மோதல் காரணமாக சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுல் அங்கங்களை இழந்தவர்களும் உள்ளனர். இவர்கள் நன்கு குணமடையும் போது வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைப்பது வழமை . இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நன்கு குணமடைந்த மற்றும் குணமடையாத நடக்க முடியாத நோயாளர்கள் என சுமார் 200 பேர் வரை குணமடைந்ததாகக்கூரி சிங்கள வைத்தியர் ஒருவர் இவர்களை வவுனியா நலன் புரி நிலையங்களுக்கு அனுப்ப உறுதிப்படுத்தியுள்ளனர் .
இந்த நிலையில் குணமடையாத நோயாளர்கள் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்ப இருப்பது தொடர்பாக பொது மக்களினால் மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி ஏ.யூட்டன் உடனடியாக செயற்பட்டதினைத் தொடந்து நன்கு குணமடைந்தவர்கள் மட்டும் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 200 பேர் நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைப்பு