Thursday, April 23, 2009

இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்ட பிரித்தானிய தூதருடன் ஜ.நா பேச்சுவார்த்தை இலங்கை கடும் ஆட்சேபம்

[வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] பாதுகாப்பு வலய பகுதி மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கை குறித்து பிரித்தானிய பிரதிநிதி டேஸ் பிரவுணுடன், கதவுகளை மூடிவிட்டு, கலந்துரையாட ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு உரிமையில்லை என இலங்கை அரசாங்கம் ஐநா செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளது. இலங்கை பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்ட நாடு அல்ல இறையாண்மையுள்ள நாடு, இலங்கை அரசினால் நிராகரிக்கப்பட்ட பிரித்தானிய பிரதிநிதியுடன் ஐநா செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஐக்கியநாடுகள் செயலாளர் பான்�]கீ�]மூன், அமெரிக்க பிரதிநிதி ஹெலவிந்தோ உல்ப், ஐநா இராணுவ அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் டேஸ் பிரவுண் ஆகியோர் இலங்கை பிரச்சினை தொடர்பில் கதவுகளை மூடிய நிலையில் கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடலுக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.