Friday, April 17, 2009

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டமை தவறு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009] இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழின உணர்வாளர் சீமான் மீது வழங்குத் தாக்கல் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாளைய‌ங்கோ‌ட்டை‌யி‌ல் நட‌ந்த பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ந்‌‌திய இறையா‌ண்மை‌க்கு எ‌திராக பே‌சியதாக நெ‌ல்லை காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்து இய‌க்குன‌ர் ‌சீமானை கைது செ‌ய்தன‌ர். சீமானின் கைதை அடுத்து அவரது சகோதரர் சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். இந்த மனு ‌‌மீதான ‌விசாரணை நடத்திய நீதிபதிகள் தர்மாராவ், ‌சி.டி.ச‌ெ‌ல்வ‌ம் ஆ‌கியோ‌ர் இ‌ந்‌திய இறையா‌ண்மை‌க்கு எ‌‌திராக பே‌சியதாக கூ‌றி தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ன் ‌கீ‌ழ் வழ‌க்கு போட முடியாது எனவும் தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌‌‌‌‌கீ‌ழ் கைது செ‌ய்ய உ‌த்தர‌வி‌ட்ட நெ‌ல்லை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ரி‌ன் உ‌த்தரவை ர‌த்து செ‌ய்வதாக ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.