Monday, October 27, 2008

இந்தியா வழங்கியுள்ள உறுதிமொழி திருப்தியளிக்கக்கூடியதல்ல : இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008,] இலங்கையில் யுத்தத்தை நிறுத்தவும், பேச்சுக்களை ஆரம்பிக்கவும் இந்தியா அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி திருப்தியளிக்கக்கூடியதல்ல என இந்திய கொம்யூனிஸ கட்சியின் தமிழக செயலர் த.பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய எல்லை நாடு ஒன்றில் மனித உரிமைகள் மீறப்படும் போது, அதனை இந்தியா வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது, தமிழர்களுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், இந்திய ஆங்கில செய்தித்தாளான த ஹிந்துவின் ஆசிரியர் என் ராம் மாத்திரமே சிறீலங்கா ஜனாதிபதியுடன் நேரடியான தொடர்பை கொண்டவர் என்ற அடிப்படையில், தமிழக மக்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மருந்து மற்றும் உணவுகளை வழங்குவதற்கான அனுமதியை பெற்றுத்தர வேண்டும் என பாண்டியன் கோரியுள்ளார். இதேவேளை இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரை போன்று இலங்கையிலும் தமிழர் ஒருவரை உயர்ஸ்தானிகராக நியமிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வர கருணாநிதி அவர்கள் இந்திய மத்திய அரசின் முடிவில் நம்பிக்கை வைத்து பதவி விலகலை கைவிட்டுள்ள நிலையில் த.பாண்டியன் இவ்வாறு கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.