[வெள்ளிக்கிழமை, 30 மே 2008] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதல்கள் மற்றும் புலிகளின் மிதிவெடியில் சிக்கி 9 சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. முகமாலையில் சிறிலங்காப் படையினர் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற மோதலில் இருவரும் மாலை 5:45 மணிக்கு விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கியதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர். மன்னார் கருங்கண்டல் முன்னரண் பகுதியில் நேற்று இரவு 8:30 மணிக்கு சிறிலங்காப் படையினருடனான மோதலில் படைத்தரப்பில் இருவர் காயமடைந்தனர். வவுனியா பெரியமடுப்பகுதியில் நேற்று மாலை 5:30 மணிக்கு விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியா மூப்பன்குளம் பகுதியில் நேற்று முற்பகல் 10:20 மணிக்கு நிகழ்ந்த மோதலில் படையினர் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
Friday, May 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.