[வெள்ளிக்கிழமை, 30 மே 2008] மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னாரின் மேற்குப் பகுதியில் உள்ள மாளிகைத்திடல் பகுதியில் இருந்து தேனுடையான் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் மிகச்செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இன்று நண்பகல் வரை நடைபெற்ற படையினரின் பெரும் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர். நண்பகல் ஓய்வின் பின்னர் மீண்டும் பிற்பகல் 12:30 மணியளவில் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தீவிர முறியடிப்புத் தாக்குதலையடுத்து மாலை 6:00 மணியளவில் பலத்த இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கியுள்ளனர். இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயடைந்துள்ளனர். படையினரின் பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில் மன்னார் பெரியமடுவுக்கு வடக்காகவும் தென்கிழக்காகவும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
Friday, May 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.