Tuesday, December 04, 2007

யாழில் மூவர் சரண்

[செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2007] யாழில் உயிர் பாதுகாப்பு கோரி சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் மூவர் சரணடைந்துள்ளனர். சண்டிலிப்பாய், யாத்தலை மற்றும் மட்டுவிலைச் சேர்ந்த 27 முதல் 49 வயதுடைய அம்மூவரும் யாழ். மனித உரிமைகள் ஆணையத்திடம் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். சிறிலங்கா இராணுவம் மற்றும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரது அச்சுறுத்தலையடுத்து வடமராட்சியைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 142 பேர் இதுவரை யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருபாலை கனான் தேவாலய நிறுவனத்தின் பாதுகாப்பில் பெண்கள், சிறார்கள் உட்பட 13 பேர் உள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.