Friday, November 30, 2007

இரு மாணவர்கள் கடத்தல்- ஒருவர் சரண்

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007] யாழ். குடாநாட்டில் இரு பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கடத்திச் சென்றுள்ளனர். பருத்தித்துறை மேற்கு புலோலியைச் சேர்ந்த வடமராட்சி வேலாயுதம் வித்தியாலய (க.பொ.த. சாதாரண தரம்) மாணவரான ரூபன் காந்த் (வயது 17) , வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி (க.பொ.த. உயர்தரம்) மாணவரான தியாகராசா கோபிநாத் (வயது 19) ஆகிய இருவரும் நேற்று வியாழக்கிழமை பாடசாலை சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் இரு மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனிடையே வட்டுக்கோட்டை, அராலி கிழக்கு பெரிய தம்பிரான் கோவிலடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர், யாழ். மனித உரிமைகள் ஆணையத்திடம் இன்று வெள்ளிக்கிழமை சரண் அடைந்துள்ளார். சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து அவர் சரணடைந்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.