Friday, November 30, 2007

வன்னி மீதான் வான் தாக்குதல்களை நிறுத்த முடியாது- தொடரும்: சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007]


வன்னிப் பிரதேசம் மீதான் வான் தாக்குதல்களை நிறுத்த முடியாது- தொடரும் என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்தவுடன் புலிகளை பேச்சுக்கு அழைத்தார். ஆனால் புலிகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். மீண்டும் அவர்களைப் பேச்சுக்கு அழைத்தோம். அதனை அவர்கள் நிராகரித்து விட்டனர்.
புலிகள் மாவிலாறு அணைக்கட்டினை மூடினர். அதற்கு எதிராக நாம் மனிதாபிமான யுத்தத்தை தொடங்கினோம். அது பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது.

வான் தாக்குதல்கள் கண்மூடித்தனமாக நடத்தப்படவில்லை. இலக்குகளை ஆராய்ந்தே தாக்குதல் நடத்தப்படுகிறது. எமது இலக்கு எவ்வகையிலும் தமிழ் மக்கள் அல்ல. நாம் பயங்கரவாதிகளை ஒழிக்கும் பாணியிலேயே ஈடுபட்டுள்ளோம். பயங்கரவாதிகள் தமது தளங்களை அப்பாவிப் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் அமைத்துள்ளனர்.

பாடசாலைகள், வணக்க ஸ்தலங்கள், குடியிருப்புகளுக்கிடையே பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் பொதுமக்களை பாதுகாப்புக்காக பயன்படுத்துகின்றனர். இதனை நாம் ஒருபோதுமே அனுமதிக்க முடியாது.

பிரபாகரனை அழிக்கும் வரை எமது தாக்குதல்கள் தொடரும்.

வன்னியில் வான் தாக்குதல்கள் தொடரும். பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படும் வரை அவர்களின் இலக்குகள் மீது நாம் தாக்குதல்களைத் தொடருவோம். இதனை எவரும் நிறுத்துமாறு கோர முடியாது என்றார் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.