Saturday, November 03, 2007

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வீரவணக்க நிகழ்வு

[சனிக்கிழமை, 03 நவம்பர் 2007] வீரகாவியமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழ்நாட்டின் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் பிரம்மாண்ட திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. வீரவணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் பாவலர் அறிவுமதி, ஓவியர்கள் வீரசந்தானம், புகழேந்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிர்வாகி பாலு, தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.