[வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2007]
மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களுக்காக உதவச் செல்லும் வழியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் திட்டமிட்ட கிளைமோர் தாக்குதலினால் கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்துலக கத்தோலிக்க அகதிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் மீது திட்டமிட்ட வகையில் கிளைமோர் தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது வன்மையாகன கண்டனத்துக்குரியது.
தமிழர் தாயகத்தில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக கத்தோலிக்க அருட்தந்தை பயணித்துக் கொண்டிருந்தார். அகதிகள் சபையின் இலட்சினையுடன் சென்ற அவரது வாகனம் குறிவைக்கப்பட்டுள்ளது.
அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதனையும் அவர்களுக்கு சேவையாற்றுதலையும் இலக்காகக் கொண்டு அகதிகள் சபை செயற்பட்டு வருகிறது.
சிறிலங்கா இராணுவத்தினரின் அண்மைய ஆர்ட்டிலறித் தாக்குதல்களால் 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இடம்பெயர்ந்திருந்த அந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக பயணித்துக் கொண்டிருந்த போதுதான் திட்டமிட்ட வகையில் அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் "இராணுவ" உத்தியின் குறியீடாக அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் படுகொலை உள்ளது. திட்டமிட்ட வகையிலான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி மக்களை இடம்பெயரச் செய்தலும் அவ்வாறாக இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு உதவ விரைகின்ற மனிதாபிமானப் பணியாளர்களை படுகொலை செய்வதும்தான் சிறிலங்கா அரசாங்கத்தின் "இராணுவ" உத்தியாகும். இந்த இராணுவ உத்தியை "இனப்படுகொலை" என்றுதான் கூற இயலும்.
மதகுருவுரும், மனிதாபிமானப் பணியாளருமான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் மரணமானது எம்மை ஆழ்ந்த அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த படு பயங்கரமான நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம்.
இப்படுகொலையையும் மனிதாபிமான பணியாளர்களுக்கு எதிரான சிறிலங்காவின் பிற கொடூரமான செயற்பாடுகளையும் அனைத்துலகம் வன்மையாகக் கண்டனம் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக கத்தோலிக்க அகதிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் மீது திட்டமிட்ட வகையில் கிளைமோர் தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது வன்மையாகன கண்டனத்துக்குரியது.
தமிழர் தாயகத்தில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக கத்தோலிக்க அருட்தந்தை பயணித்துக் கொண்டிருந்தார். அகதிகள் சபையின் இலட்சினையுடன் சென்ற அவரது வாகனம் குறிவைக்கப்பட்டுள்ளது.
அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதனையும் அவர்களுக்கு சேவையாற்றுதலையும் இலக்காகக் கொண்டு அகதிகள் சபை செயற்பட்டு வருகிறது.
சிறிலங்கா இராணுவத்தினரின் அண்மைய ஆர்ட்டிலறித் தாக்குதல்களால் 10 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இடம்பெயர்ந்திருந்த அந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக பயணித்துக் கொண்டிருந்த போதுதான் திட்டமிட்ட வகையில் அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் "இராணுவ" உத்தியின் குறியீடாக அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் படுகொலை உள்ளது. திட்டமிட்ட வகையிலான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி மக்களை இடம்பெயரச் செய்தலும் அவ்வாறாக இடம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு உதவ விரைகின்ற மனிதாபிமானப் பணியாளர்களை படுகொலை செய்வதும்தான் சிறிலங்கா அரசாங்கத்தின் "இராணுவ" உத்தியாகும். இந்த இராணுவ உத்தியை "இனப்படுகொலை" என்றுதான் கூற இயலும்.
மதகுருவுரும், மனிதாபிமானப் பணியாளருமான அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளாரின் மரணமானது எம்மை ஆழ்ந்த அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த படு பயங்கரமான நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம்.
இப்படுகொலையையும் மனிதாபிமான பணியாளர்களுக்கு எதிரான சிறிலங்காவின் பிற கொடூரமான செயற்பாடுகளையும் அனைத்துலகம் வன்மையாகக் கண்டனம் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.