Saturday, September 29, 2007

தொழில் நுட்பக் கல்லூரி மாணவன் உட்பட இரு இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள்

[சனிக்கிழமை, 29 செப்ரெம்பர் 2007] சுன்னாம் பகுதியில் நேற்று இரவு வீட்டில் இருந்த இளைஞர் ஓருவர் இனம் தெரியாத ஆயததாரிகளினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார். இரவு 9.00 மணியளவில் வீட்டிற்க்கு சென்ற ஆயததாரிகள் வீட்டாரை துப்பாக்கி முனையில் நிறுத்திவிட்டு தொழில் நுட்பக் கல்லூரியில் கல்வி கற்க்கும் மாணவனான ஆனந்தரத்தினம் கஜன் 22 வயது இளைஞரையே கடத்திச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் ஈ.பிடி.பி முகாமுக்கு முன்னாள் உள்ள ஒழுங்கையில் வசிப்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராகும். பெற்றோர்கள் இது சம்பந்தமாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளார்கள். இதேவேளை நேற்ற இரவு 9.30 மணியளவில் வாகனத்தில் சென்றவர்கள் வீட்டிற்க்குள் அத்து மீறிப் பிரவேசித்த ஆயததாரிகள் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதுடன் விட்டில் உள்ளவர்களையும் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுக் சென்றுள்ளார்கள. அளவெட்டி வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றதுஇரவு வீட்டிற்க்கு வந்தவாகள் இளைஞரின் பெயரை கூறி அழைத்ததாகவும் வீட்டார் கதவைத் திறந்து கொண்டு சென்ற போது குறிப்பிட்ட இளைஞரை கடத்த முற்பட்டனர். இதனை தடுக்க முயன்ற வேளையில் ஆயுததாரிகளுக்கும் இளைஞனின் பெற்றோர்களுக்கும் இடையே பெரும் இழுபறி நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயும் தகப்பனும் தலையில் தாக்கப்பட்டுள்ளார்கள். இதனைத் தொடாந்து கடத்தியவாகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற் கொண்டுள்ளார்கள். மயக்கமுற்ற நிலையில் தாயும் காயங்களுடன் தகப்பனும் தெல்லிப்பழை மாவட்ட வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் காயங்களுக்க உள்ளாகியவாகள் திரு திருமதி இராசதுரை என்பவர்களாகும் இவாகளின் 23 வயதான மகன் பிரபாகர் இவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.