[புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2007]
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் முன்னணி நிலைகள் ஊடாக ஊடறுப்புச் செய்ய முயற்சித்த விடுதலைப் புலிகள், இந்த தாக்குதலை நடத்தியதாகவும் சிறிலங்கா இராணுவத்தினர் பதில் தாக்குதலை அடுத்து புலிகள் தமது தாக்குதலை கைவிட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குடாநாட்டு முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.