Thursday, September 27, 2007

சொல்ஹெய்முடன் மகிந்த ஆலோசனை

[வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2007] அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது பொதுக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளச் சென்ற இருவரும், இலங்கை இனப்பிரச்சினை குறித்து சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தனர் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்கா அரசாங்கத்தின் கிழக்கு இராணுவ நடவடிக்கை குறித்தும் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் குறித்தும் இந்த சந்திப்பில் எரிக் சொல்ஹெய்முக்கு மகிந்த விளக்கிக் கூறியதாகவும், சமாதான முன்னெடுப்புக்கள் குறித்து இருவரும் ஆராய்ந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.