Friday, August 24, 2007

தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் தரைமட்டம்: அப்பகுதியில் புதிய காவல் நிலையம் உருவாக்கம்

[வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2007]

சிறீலங்காப் படையினரால் மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு தாண்டியடிக்காக காவல் நிலையம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது.

தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் சிறீலங்காப் படையினரால் ''புல்டோசர்'' மூலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

காவல் நிலைய கட்டிட வேலை துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் சிறீலங்காப் படையினரால் தரைமட்டமாக்கப்பட்டமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

3 comments:

  1. இறந்த தமிழனின் எலும்புகள் மீது சிங்களவனின் படை எடுப்பு, தமிழன் எலும்புகள் உடைபட்டு நொருங்கும் பெருவொலி கடைக்கோடி தமிழன் காதுவரை கேட்கிறது. புலி பாயும் வரை பொறுமை காத்து, உரமூட்டுவோம் அதன் கையை.

    ReplyDelete
  2. மரித்த மாவீரர்களின் கல்லறைகளை உடைப்பது மனிதநேயமல்ல.

    ReplyDelete
  3. நாங்கள் நாசி (Nazi)இனப் படு கொலையாளிகளை விட ஒரு படி மேலேச் சென்று விட்டோம் என்று உலகுக்குப் பறை சாற்றும் சிங்கள அரசியல் வாதிகள்,தங்கள் இனத்திற்கு நீங்காத அவமான முத்திரை குத்துகிறார்கள்.

    இதைப் பொறுத்துக் கொண்டிருக்கும் சிங்கள நல்லவர்களே நீங்களும் இதில் அடக்கம்.உலகம் சிரிக்கப் போகிறது.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.