[திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007]
மனித நேய பணியாளர்கள் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை மாறியுள்ளமையை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் தெளிவு படுத்தியுள்ளது.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா சபையின் மனிதாபிமான பணிகளுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோல்ஸ் உலகில் மனிதாபிமான பணியாளர்களுக்கு அதிக அச்சுறுத்தல் இலங்கையிலேயே ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
ஹோல்சின் இந்த கருத்து குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் கடுமையான ஆட்சேபம் தெரிவித்திருந்ததோடு ஜோன் ஹோல்சை பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாயக்கா பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ஜோன் ஹோல்ஸ் இலங்கையில் மனதாபிமான பணியாளர்கள் அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே பணியாற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்த கருத்தை தவறு என்று நிரூபிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் போதிய ஆதாரங்கள் இல்லை எனற்கு கொழும்பில் உள்ள ஐநாவின் வதிவிட பிரதிநிதி வலன்ரின் தெரிவித்துள்ளார்.
தமது பணிப்பாளர் தெரிவித்த கருத்து உண்மையற்றது என்றால் அதனை நிரூபிப்பதற்கும் மனித நேய பணியாளர்கள் அச்சுறுத்தல்கள் இன்றி பணி புரிகின்றார்கள் என்தை அனைத்துலகிற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Monday, August 13, 2007
மனித நேயப் பணிகளை முன்னெடுக்க முடியாத நாடாக மாறியுள்ளது - மீண்டும் ஜ.நா
Monday, August 13, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.