[புதன்கிழமை, 18 யூலை 2007, ] ராடார் செயலிழந்துள்ளதனால் சிறிலங்காவின் பிரதான வான் போக்குவரத்து கடந்த இரு வாரங்களாக கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இதனால் சிறிலங்காவிற்கு வரும் வானூர்திகளின் பாதுகாப்பு தொடர்பாக கடும் அச்சம் தோன்றியுள்ளது. இந்த நிலைமையை இருட்டடிப்பு செய்வதற்கு அதிகாரிகள் முயல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பேதுருதாலகால மலையில் நிறுவப்பட்டிருந்த ராடாரானது கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீசிய கடும் காற்றினால் சேதமடைந்துள்ளது. வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் வான் போக்குவரத்துக்களை கண்காணிப்பதற்கு வேறு ராடார்கள் இல்லாததனால் அவர்கள் தற்போது வானூர்திகளை கையாள்வதற்கு செய்முறை கட்டுப்பாடு என அழைக்கப்படும் பழமையான முறையை பயன்படுத்தி வருகின்றனர். இரு வானூர்திகளுக்கு இடையிலான தூரமானது 80 கடல் மைல்களாக இருத்தல் வேண்டும் எனினும் அதன் மறுதலையாக வழமையாக அது 5-4 கடல் மைல்களாகவே பேணப்படுகின்றன என தனது பெயரை குறிப்பிட விரும்பாத வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வான்பரப்பில் வானூர்திகளை கையாளும் இரத்மலானை வானூர்த்தித் தளத்தில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையமும் கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தித்தளத்தில் உள்ள இரு ராடார்களையே பயன்படுத்தி வருகின்றன. இதனிடையே கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தித்தளத்தில் உள்ள ராடார்களின் கண்காணிப்பு தூர வீச்சானது 60 கடல் மைல்களாகும். எனவே ராடாரின் தூர வீச்சிற்கு அப்பாற்பட்ட பெருமளவு பிரதேசங்களினூடாக கண்டறியப்படாது வானூர்திகள் கடந்து செல்லலாம் என வானூர்திக் கட்டுப்பாட்டாளர்கள் முறையிட்டுள்ளனர். சிறிலங்காவானது வடக்கில் இந்தியாவின் திருவனந்தபுரத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் பேர்த் வரையிலும் இந்தோனேசியாவின் சில தீவுகள் உள்ளடங்கலாக பொது வானூர்தி போக்குவரத்துக்களை கையாண்டு வருகின்றது. திருவனந்தபுரத்தின் வான்பரப்பை வானூர்திகள் கடக்கும் போது நாம் அதனை கையாளமுடியும். ஆனால் வானூர்திகள் ராடாரின் தூர வீச்சிற்கு அப்பால் உள்ள பெருமளவான வான்பரப்பினால் சென்றுவிடலாம். இது வானூர்திகளின் பாதுகாப்பை பொறுத்தவரை ஆபத்தானது என கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் செயலிழந்த ராடாரானது 200 கடல் மைல் தூரவீச்சு உடையது. எனினும் தற்போது பயன்படுத்தப்படும் ராடார் 60 கடல் மைல்கள் தூர வீச்சுக் கொண்டவை. மேலும் இரத்மலானை வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தினால் பயன்படுத்தப்படும் கட்டுநாயக்கா அனைத்துலக நிலையத்தில் உள்ள இரண்டாவது ராடாருக்கும் அதனை பயன்படுத்துவதற்குரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்துலக அதிகாரிகளினால் அதற்குரிய அனுமதி வழங்கப்படவில்லை. அதனை திருத்துவதற்கு 6 மாதங்கள் செல்லலாம் என பொது வான் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பேதுருதாலகால மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரதான ராடார் தொகுதி இரு வருடங்களாக இயங்க முடியாத நிலையில் உள்ளதாகவும் இது கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அங்கு நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முதன்மை ராடார்களே வானூர்திகளை கண்டறிவதற்கு இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அங்கு நிறுவப்பட்டிருந்த இரண்டாம் நிலை ராடார் தொகுதிகளும் கடுமையான காற்று காரணமாக கடந்த இரு மாதங்களாக செயலிழந்துள்ளன. கடுமையான காற்றின் காரணமாக இந்த ராடாரின் சமிக்ஞை வாங்கி சேதமடைந்ததுடன் ராடாரும் சரிந்துள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது. மூலம்: புதினம்
Wednesday, July 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.