[வியாழக்கிழமை, 19 யூலை 2007,] [பி.கெளரி] கிழக்கு மாகாணமானது பொருளாதார மற்றும் பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதுடன் ஈழப் போரிலும் அது பெரும் பங்கு வகித்து வருவதாக சிறிலங்கா இராணுவ முன்னாள் உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஏ.எம்.யூ செனிவரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு எழுதிய ஆய்வு பத்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வரும் ஈழப்போரில் கிழக்கு மாகாணத்தின் கேந்திர முக்கியத்துவம் குறித்து ஈழப்போர் ஆதரவாளர்கள் அதன் எதிர்ப்பாளர்கள் ஆகியவர்களால் பல தரப்பட்ட கொள்கைகள், கருத்துக்கள், பார்வைகள் முன்வைக்கப்பட்டும், வெளியிடப்பட்டும் இருந்தன. எனினும் கிழக்கு மாகாணத்தின் கேந்திர முக்கியத்துவம் குறித்த தரமான ஆய்வை நான் இதுவரை காணவில்லை. பூகோள ரீதியாக ஏனைய மாகாணங்களை விட கிழக்கு மாகாணம் மிக நீண்ட கடற்கரையை கொண்டது. எனவே இயற்கையாகவே இது கடற்பொருட்கள், கனிமப்பொருட்கள் போன்ற பெருமளவான கடல் வளங்களை கொண்டது. நாட்டின் பொருளாதாரத்தில் இந்த கடற்கரையின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதேசமயம் ஈழப் போராட்டவாதிகள் ஈழத்தை அமைக்க முடியாவிட்டாலும் இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து சமுத்திரத்தில் மட்டுமல்லாமல் முழு உலகிலும் மிகப்பெரும் இயற்கைத்துறைமுகமான திருமலைத்துறைமுகத்தின் அமைவிடம் குறித்து நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் முக்கியத்துவம் இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானியா மற்றும் அதன் கூட்டுப்படைகளால் நிரூபிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த கூட்டுப்படைகளின் கப்பல்களை ஜப்பான் தாக்கியழிக்க முற்பட்டிருந்தது. அதன் பிந்திய முக்கியத்துவமாக ஈழப் போராட்டத்தின் தொடக்கத்தில் இந்தியா அதன் மீது கொண்ட அக்கறையை குறிப்பிடலாம். வர்த்தக மற்றும் கேந்திர முக்கியத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்காக அதனை கையகப்படுத்த இந்தியா தொடர்ச்சியாக முயன்று வருகின்றது. வெளியில் தெரியும் மற்றும் தெரியாது இயற்கை வளங்களான கனிமப்பொருட்கள், கடல்வளங்கள் என்பனவும் ஏராளமாக கிழக்கு கரையில் இருக்கின்றன. எங்களை அவர்கள் தோற்கடித்து படைகளை கொண்டு கைப்பற்றும் வரை சிறிலங்கா அரசு, ஈழத்திற்கு அல்லது வேறு வெளிநாடுகளுக்கோ அதனை கொடுக்கப்போவதில்லை. வடபகுதியில் இருந்து முற்று முழுதாக சிங்களவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். யாழ். குடாநாடு படையினரின் மிகுந்த பாதுகாப்பில் உள்ள போதும் எந்த ஒரு சிங்கள இனத்து அரச அதிகாரியும் அங்கு பணியாற்றவில்லை. வட மாகாணத்துடன் ஒப்பிடும் போது பல இன மக்களைக் கொண்டிருப்பதே கிழக்கு மாகாணம் தப்பிப் பிழைத்தமைக்கான காரணமாகும். இங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவே ஒரு சமநிலையில் உள்ளனர். மேலும் முஸ்லிம் மக்கள் சில பகுதிகளில் செறிவாக உள்ளனர். நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு பல்வேறுபட்ட வழிகளினூடாக இலகுவான தொடர்புகளை உள்ளதும் கிழக்கு மாகாணத்தின் மற்றுமொரு அனுகூலம். இந்த முக்கியத்துவத்தை உணர்ந்த பிரித்தானியா ஆட்சியாளர்கள் மாவட்ட நகரங்களை திருமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றுடன் வீதிகள், தொடருந்துப் பாதைகள் மூலம் இணைத்திருந்தனர். ஈழப் போரின் மிகவும் நெருக்கடியான கலகட்டங்களில் நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றியிருந்த சமயத்தில் விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்ட தொடரூந்து பாதைகளை சீர்செய்த அனுபவம் எனக்கு உண்டு. கடந்த 25 வருடங்களில் கிழக்கு மாகாணத்திற்கான இந்த வழங்கல் வழிகளை காப்பாற்றுவதற்காக நுற்றுக்கணக்கான படையினரும், காவல்துறையினரும் தமது உயிர்களை இழந்திருந்தனர். இந்த சமயத்தில் தொடரூந்து பணியாளர்களின் துணிச்சலான சேவையையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. திருமலை மற்றும் மட்டக்களப்புக்கான வீதிகளை பாராமரிப்பதற்கும் அதனை பாதுகாப்பதற்கும் பலியாகிய படையினரின் எண்ணிக்கை கணக்கற்றது. நாட்டின் ஏனைய பகுதிகளின் தொடர்புகள் இன்றி கிழக்கு மாகாணம் இயங்க முடியாது என்பது தெளிவானது. வடக்கு மாகாணத்தின் நிலையும் அதுவே. விடுதலைப் புலிகள் உறுப்பினர்களையும், நிதியையும் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பெற்று வருகின்றனர். ஈழப்போரை நடத்துவதற்கு வடக்கில் உள்ள மனித வளம் போதாது. 25 வருடங்களக்கு மேலாக விடுதலைப் புலிகள் மனித வலுவையும், நிதியையும் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெற்று வருகின்றனர். கிழக்கில் இருந்து அவர்களுக்கு படைவலு கிடைத்திருக்காது விட்டால் அவர்களால் இவ்வளவு காலம் தாக்குப் பிடித்திருக்க முடியாது. சிறிலங்காவில் விவசாய வளம் மற்றும் வன வளம் ஆகியவற்றிற்கான பகுதியும் கிழக்கில் அதிகளவில் உண்டு. நாட்டில் மகாவலி ஆறு மிகவும் நீளமான நதியாகும். பண்டைய காலத்தில் இருந்து இந்த பகுதியில் உள்ள நெற்செய்கைக்குரிய நிலம் இந்த நதி நீரினால் ஆண்டு முழுவதிலும் விளைச்சலைக் கொடுக்கக்கூடியதாக இருந்து வருகின்றது. அம்பாறை, திருமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் விளையும் நெல் நாட்டின் மொத்த அரிசித் தேவையில் 50 விகிதத்தை பூர்த்தி செய்யக்கூடியது. மேற்கூறப்பட்ட காரணங்களால் தான் விடுதலைப் புலிகள் தமது ஈழத்தில் கிழக்கு மாகாணத்தையும் சேர்ப்பதற்கு போராடி வருகின்றனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் பல ஆயிரக்கணக்கான படையினர், காவல்துறையினர், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பலியாகி உள்ளனர். சில சமயங்களில் ஒரே களத்தில் பலமுறை இது நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நீண்டகாலத் திட்டமும், மனித மற்றும் பொருட்களின் வளமும் மிக அதிகளவில் தேவை. இந்த பகுதியை தக்கவைப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் பெருமளவான வளங்களும், நடைமுறைகளும் தேவை. இது அப்பகுதி மக்களின் மனங்களையும், இதயத்தையும் படையினரும், அரசும் வெல்லும் போதே சாத்தியமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்
Thursday, July 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.