[வெள்ளிக்கிழமை, 27 யூலை 2007] கொழும்பில் கடத்த தமிழர் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொட்டாஞ்சேனை சிவானந்தா வீதியில் வசித்து வந்த இராஜரட்ணம் இலங்கேஸ்வரன் (வயது 34) கடந்த மே 6 ஆம் நாள் நீல வானில் வந்தோரால் கடத்தப்பட்டார். இலங்கேஸ்வரனின் துணைவியாரும் மகளும் லண்டனில் உள்ளனர். இலங்கேஸ்வரனின் பெற்றோர், மே 6 ஆம் நாள் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தனர். இது தொடர்பில் இலங்கேஸ்வரனின் பெற்றோர்கள் சிறிலங்கா காவல் நிலையத்திலோ அல்லது பொது அமைப்புக்களிடமோ முறைப்பாடு செய்யவில்லை. இதனிடையே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த இலங்கேஸ்வரனின் பெற்றோர்களுக்கு தங்களது மகன் பூசா தடுப்பு முகாமில் உள்ள தகவல் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை காலிக்குச் சென்று சிறையில் தங்களது மகன் உள்ளதை உறுதி செய்தனர். இது தொடர்பில் பிரதி அமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
Friday, July 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.