Friday, July 20, 2007

மன்னார் நீலாசேனை மினிமுகாமை தாக்கியழித்தனர் புலிகள்: 10 இராணுவத்தினர் பலி.!

[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007,] மன்னார் நீலாசேனை சிறிலங்கா இராணுவ மினிமுகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 10 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மன்னார் உயிலங்குளம் பகுதி நீலாச்சேனை சிறிலங்கா இராணுவ மினி முகாம் மீது விடுதலைப்லிகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.35 மணியளவில் தாக்குதல் நடத்தினர். இதில் 10 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய இராணுவத்தினர் படுகாயமடைந்து தப்பியோடியுள்ளனர். இத்தாக்குதலின் போது ஆயுதங்களும் வெடிபொருட்களும் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மினிமுகாம் அழிக்கப்பட்ட தாக்குதலில் போராளிகள் 4பேர் வீரச்சாவைத்தழுவியுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.