Friday, July 20, 2007

கிளிநொச்சியில் புலிகளின்குரலின் ஊரெங்கும் ஒலிவெள்ளம்.!!

[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007,] புலிகளின்குரலின் ஊரெங்கும் ஒலிவெள்ளம் சிறப்பு ஒலிபரப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியில் தொடங்கியது. நிகழ்வில் முதன்மைச்சுடரை தமிழீழ திரைப்பட வெளியீட்டுப்பிரிவுப்பொறுப்பாளர் செழியன் ஏற்றினார். தொடர்ந்து சுடர்களை தமிழீழ விளையாட்டுத்துறை இணைப்பாளர் இன்பன், கிளிநொச்சி மத்தியகல்லூரி முதல்வரும் கிளிநொச்சி வானொலிமன்றத்தலைவருமான இரட்ணகுமார்- மூத்த தபேலா கலைஞர் வரதன் ஆகியோர் ஏற்றினர். தமிழீழத் தேசியக்கொடியை புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஏற்றினார். வாழ்த்துரைகளை செழியன் மற்றும் இரட்ணகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். புலிகளின்குரல் முதன்மைச்செய்தியாசிரியர் தி.இறைவன் தொடக்கவுரையை நிகழ்த்தினார். செழியன் தனதுரையில் ஒரு நாட்டரசுக்குரிய வானொலியாக புலிகளின்குரல் வளர்ச்சி பெற்றுள்ள நிலையின் வெளிப்பாடுதான் ஊரெங்கும் ஒலிவெள்ளம் என்று குறிப்பிட்டார். எதிரியின் அட்டூழியங்களுக்கு மத்தியில் எமது வெற்றிகளின் வெளிப்பாடுதான் இது என்றும் அவர் கூறினார். இரட்ணகுமார் தனதுரையில் மக்கள் தமது திறன்களை வெளிப்படுத்த தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மக்களிடம் புலிகளின்குரல் நடமாடுகின்றது என்பதன் வெளிப்பாடுதான் ஊரெங்கும் ஒலிவெள்ளம் என்று குறிப்பிட்டார். வரலாற்றில் என்ன நடந்தது என்பதன் குறியீடான சிங்களம் தனது ஆக்கிரமிப்பை நடத்தி சிங்களக்கொடியேற்றிக்கொண்டாடிய கிளிநொச்சி எழுச்சிபெற்று நிற்பது இன்று மகிந்தவின் குடும்பிமலை கொண்டாட்டத்துக்கு என்ன நடக்கும் என்பதற்கான குறிகாட்டியுமாகும் என்று த.இறைவன் தனதுரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து மக்கள் திரள் பங்குகொள்ள ஊரெங்கும் ஒலிவெள்ளம் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.