Wednesday, June 13, 2007

அம்பாறை செயலகத்தில் குண்டுப்புரளி அபிவிருத்திக் குழு கூட்டம் தாமதம்.!!

[புதன்கிழமை, 13 யூன் 2007] அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்றுக்காலை ஏற்பட்ட குண்டுப்புரளி காரணமாக மாவட்ட செயலக ஊழியர்கள் பரபரப்படைந்து காணப்பட்டனர். அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றுக்காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. இக்கூட்டத்திற்கு அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், பைசல் காசீம், ஹசன் அலி மற்றும் தயாரத்ன உட்பட அம்பாறை மாவட்டத்தின் சகல திணைக்களத் தலைவர்களும் வருகை தந்திருந்தனர். இவ்வேளையில் அம்பாறை மாவட்ட செயலக வளாகத்தினுள் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் செயலகம் பரபரப்படைந்து காணப்பட்டது. இதனையடுத்து உஷார் நிலை அடைந்த பாதுகாப்புத் தரப்பினர் அமைச்சர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அபிவிருத்திக் குழுக் கூட்டம் உரிய நேரத்திற்கு இடம்பெறவில்லை. பாதுகாப்புத் தரப்பினர்களின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் இக்கூட்டம் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.