Monday, June 25, 2007

இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டையொட்டி இன்று கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007] சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு ஓஸ்லோவில் நடைபெற உள்ளதையொட்டி நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளது. தமிழ் மக்கள் மீது கொடும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் சிறிலங்கா அரசு தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் கடைப்பிடிக்கும் மென்போக்கு அணுகுமுறை மீதான தமிழ் மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் முன்பாக ஐரோப்பிய நேரம் முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற உள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.