Monday, June 25, 2007

அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை மகிந்தவுக்கு இல்லை: கல்யநந்த கொடகே.!

[திங்கட்கிழமை, 25 யூன் 2007] சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கல்யநந்த கொடகே சாடியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மறைந்த பிரேமதாசவின் 83 ஆவது சிரார்த்த நாள் கருத்தரங்கில் கல்யநந்த கொடகெ பேசியதாவது: சிறிலங்கா மேற்குலகத்தைச் சார்ந்துதான் உள்ளது. உள்நாட்டு ஆடைத் தயாரிப்புக்கள் அனைத்துமே மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக வங்கி உள்ளிட்டவைகள் அனைத்துலகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்குரிய திட்டத்தை முன்வைக்க வேண்டியது அவசியமானதாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் பிரேமதாச ஆகியோரிடமிருந்து அனைத்துலக உறவுகளைக் கையாளும் திறமையை தற்போதைய மகிந்த அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும். மகிந்த அரசாங்கத்துக்கு அனைத்துலக உறவுகளைக் கையாளும் திறமை இல்லை என்றார் அவர். இந்திய ஆக்கிரமிப்புப் படை தமிழீழத்தில் நிலைகொண்டிருந்தபோது இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கல்யநந்த கொடகே என்பது குறிப்பிடத்தக்கது. மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.