Monday, June 04, 2007

இராணுவத் தளபதி வவுனியாவில் பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்வு.!!

[திங்கட்கிழமை, 4 யூன் 2007]
இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத்
பொன்சேகா நேற்று முன் தினம் சனிக்கிழமை மாலை வவுனியாவுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்துள்ளார்.

வன்னி கட்டளைத் தலைமையகத்தில் வைத்து மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க தலைமையிலான உயர் இராணுவ அதிகாரிகள் இராணுவத் தளபதியை வரவேற்று அங்குள்ள பாதுகாப்பு முன் ஏற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்க மளித்துள்ளனர்.

இதனையடுத்து, அவசர நேரத்தில் செயற்பட வேண்டிய முறைகள் தொடர்பாக இராணுவத் தளபதி தனது அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

இராணுவத் தளபதியின் வவுனியாவிற்கான திடீர் விஜயத்தின் பின்னர் நேற்று முன் தினம் இரவு வவுனியா பம்பைமடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவத்தினருக்கு எதிராக பாரிய தாக்குதலொன்றை மேற்கொண்டு முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை தகர்த்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.