Saturday, June 30, 2007

ஐ.தே.க.வின் ஆதரவினை பெற்றுத்தந்தால் 2 மாதங்களுக்குள் அரசியல் தீர்வு.!!

[சனிக்கிழமை, 30 யூன் 2007] சிறிலங்கா பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவைப் பெற்றுத்தந்தால் இரு மாதங்களுக்குள் அரசியல் தீர்வினை முன்வைக்க முடியும் என்று வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசின் இந்த அறிவித்தலை கருத்தில் எடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் விரைவில் அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்சவின் அரசியல் யோசனை தொடர்பாக அமெரிக்கா அவரிடம் வினவியிருந்த நிலையிலேயே அரசு இந்த அறிவித்தலை தூதரகங்களுக்கு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்துக்கட்சி மாநாட்டின் யோசனைகளுக்கு அமைய இறுதி இணக்கப்பாடு தொடர்பான அறிக்கைகளை தயாரிக்க ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே அது சாத்தியமாகுமென தூதரகங்களுக்கு அரசு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.