Friday, May 18, 2007

உடுப்பிட்டிப் படைமுகாம் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளாகியது.!!

[வெள்ளிக்கிழமை, 18 மே 2007] வடமராட்சி உடுப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள சிறீலங்காப் படைகளின் படைமுகாம் இன்று மதியம் இனம் தெரியாத ஆயுதாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. வீதித்தடைகளை திசைதிருப்பி படைமுகாமிற்கு உட்புகுந்த ஆயுததாரிகள் 15 நிமிடங்கள் வரை படையினருடன் மோதல்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் எதுவித இழப்புக்களும் இன்றி அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.