Friday, May 25, 2007

இலங்கையில் அதிகரித்துள்ள வன்செயல்கள் துரதிர்ஷடவசமானவை - அமெரிக்கா

[வெள்ளிக்கிழமை, 25 மே 2007]


இலங்கையில் தற்போது அதிகரித்து வருகின்ற வன்செயல்கள் துரதிர்ஷடவசமானவை என்று வர்ணித்துள்ள அமெரிக்கா, இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகள் அமைப்பு அங்கு மோதல்களைக் கைவிட்டு, பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முன் வரவேண்டும் என்று கேட்டுள்ளது.

அமெரிக்க அரசுத்துறையினால் தினசரி நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய துறையின் சார்பில் பேசவல்ல துணைப் பேச்சாளர் டாம் கசே அவர்கள், நேற்றைய வன்செயல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, இலங்கையின் நடந்துள்ள இந்த வன்செயல்கள் துரதிஷ்டவசமானவை என்றும்ன் அங்கு மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், ரிச்சர்ட் பெளச்சர் அவர்கள் மே மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை அங்கு சென்றிருந்தார் என்றும் அங்கு அவர் அரசாங்க அதிகாரிகளுடனும் மற்றும் பரந்த அளவில் பொதுமக்கள் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் சமாதான முயற்சிகளை முன்னேற்றமடையச் செய்யக் கூடிய அதிகாரப் பகிர்வு பிரேரணைகளை கண்டறியுமாறு அவர் அவர்களிடம் கேட்டு கொண்டதாகவும் டாம் கசே கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.