Monday, May 28, 2007

அரசும் புலிகளும் இராணுவ வெற்றியிலேயே அதிக நம்பிக்கை அதனால் போர் புரிவதில் வெகு தீவிரம்! விரைவில் யுத்தம் வெடிக்கும் அபாயம்.!

[திங்கட்கிழமை, 28 மே 2007]

அரசாங்கப் படைகளும் விடுதலைப் புலிகளும் தமக்கே வெற்றி கிட்டும் என்று அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றன. அதனால், அவை போரை நடத்துவதிலேயே வெகு தீவிரமாகக் காணப்படு கின்றன
இத்தகைய பின்னணியில் எதிர்வரும் வாரங்களில் போர்வெடித்து, வன்முறைகள் அதிகரித்து இரத்த ஆறு ஓடும் சாத்தியம் நிறையவே உண்டு.
இவ்வாறு இலங்கை நிலைமை குறித்து இராஜதந்திரிகள் கணிப்பீடு செய்திருக்கிறார்கள்.

சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, இலங்கையின் நிலைமை குறித்த தனது ஆய்வில் இவ்வாறு இராஜதந்திர வட்டா ரங்களை மேற்கோள் காட்டித் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

அமைதி முயற்சிகள் முறிந்துள்ள நிலை யில் வான் வழி மற்றும் கடல் சமர்கள் பெரும் எடுப்பில் வெடிப்பதற்கான ஏது நிலைகள் அதிகரித்துள்ளன. அத்தகைய சமருக்கு அரசு, புலிகள் ஆகிய இருதரப்பினருமே மும்முரத்துடனும் தீவிரத்துடனும் தயாராகி வருகின்றனர் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வானிலும் கடலிலும் புலிகளால் எழுந் துள்ள சவாலைச் சமாளிப்பதற்காக அரசுப் படைகள் "மிக் 29' ரக சுப்பசொனிக் ஜெற் விமானங்கள், "எம். ஐ.24' ரக தாக்குதல் ஹெலிகள், கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு அதிக வீச் சும் செயற்றிறனும் கொண்ட சுடுகலன்கள் போன்றவற்றைச் சுவீகரிப்பதில் முனைப்புக் காட்டுகின்றன எனப் பாது காப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

""சமாதான முயற்சிகள் மீள ஆரம்பிக் கப்படுவதற்கான சாத்தியங்கள் பெரும் பாலும் அருகி அடியோடு இல்லாமல் போய் விட்டன. செத்துவிட்ட யுத்தநிறுத்தத்தை இனிமேலும் காப்பாற்றலாம் என்று நான் நம்பவில்லை.

வருங்காலத்தில் இன்னும் கொடூர யுத்தத்தை நாம் எதிர்பார்க் கலாம்'' என்று மாற்றுக் கொள்கைக் கான நிலையத்தின் ஊடகப் பணிப்பாளர் சுனந்த தேசப்பிரிய கூறுகின்றார்.

இந்தியா இலங்கை இடையேயுள்ள குறுகிய பாக்கு நீரிணையில் புலிகளின் நகர்வுகளை அவதானிக்கும் நெடுந்தீவுக் கரையோர "ரடார்' நிலையத்தைப் பறிகொடுத்தமை அரசுப் படைகளுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு என்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.

""நெடுந்தீவு மீதான தாக்குதல் மூலம் புலிகள் தங்களின் கடல்வலு ஆதிக்கத்தை மீள ஒரு தடவை நிரூபித்திருக்கின்றார்கள். அதேசமயம் கொழும்பில் நடத்திய கிளைமோர் தாக்குதல் மூலம் தங்களின் கெரில்லாத் தாக்குதல் வலிமையும் பாதுகாப்பாகத் தங்களுக்கு உள்ளது என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றனர்.'' என்கின்றார் பாதுகாப்பு நிலைவரம் பற்றிய ஆய்வாளர் நாமல் பெரேரா.

""தீவுப்பகுதி மீது இவ்வாறு ஒழுங்குக் கிரமமாகத் தாக்குதல் தொடருமானால் யாழ்ப்பாணம் முழு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.'' என்கின்றார் ஓய்வு பெற்ற இராணுவ பிரிகேடியர் விபுல் போட்ஜு.

இராணுவம் தற்போது ஆரம்பித்துள்ள பெரும் படை நடவடிக்கைத்திட்டத்தை நிறுத்தாத வரையில், 2005 ஒக்டோபரில் குழம்பிய அமைதிப் பேச்சுகளை மீள ஆரம்பிக்க இடமேயில்லை என்று புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் கூறியிருக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.

இவையெல்லாம் பெரும் யுத்தம் வெடிப்பதற்கான கட்டியங்கூறலாகவே கொள்ளப்படவேண்டியவை.

இவ்வாறு அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கின்றது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.