[சனிக்கிழமை, 26 மே 2007] இலங்கை நிலைமைகள் குறித்து அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகரிக்க வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெய்த் வாஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கான நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: இலங்கையில் நடைபெறும் போரில் மீது அக்கறை கொள்வோர் மீது பல குழுவினரும், ஊடகங்களும் குற்றங்களை சுமத்துவது அவநம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றது. இலங்கை விடயத்தில் அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். மோதல்களில் ஈடுபடும் தரப்புக்களை ஒரு அமைதி வழியிலான தீர்வைக் காண்பதற்கு கொண்டு வரும் முயற்சிகளுக்காக அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத செயல்கள் போன்றவற்றில் எந்தக் குழுவினர் ஈடுபட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டியது. நானோ அல்லது எமது எந்த அங்கத்தவர்களோ விடுதலைப் புலிகளை சந்தித்தது இல்லை. இலங்கையில் நடைபெறும் போரில் மீது அக்கறை கொள்வோர் மீது குற்றங்களை சுமத்துவது அவநம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றது. அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு அமைதி வழியிலான தீர்வுகளுக்கான அழைப்பை விடுத்துள்ளதுடன் மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத செயல்களையும் கண்டிக்கின்றது. அனைத்துக் கட்சிக் குழுவானது பிரித்தானியா அரசின் கருத்தை பிரதிபலிக்கவில்லை. எனினும் அது பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த பல மூத்த உறுப்பினர்களை கொண்டுள்ளது. அமைதியோ அல்லது அமைதிக்கான நம்பிக்கைகளோ அற்ற நிலையில் சிறிலங்காவில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே தான் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றது என்றார் அவர். இலங்கையில் ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்குரிய பேச்சுக்களுக்கு விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைகள் காரணம் எனவும் அனைத்துத் தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட்டு ஒரு தீர்வைக் காண்பதற்கு தடை நீக்கப்பட வேண்டும் எனவும் முன்னர் பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் வாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நன்றி:புதினம்
Saturday, May 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.