Thursday, May 31, 2007

புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவினுடையது.!

[வியாழக்கிழமை, 31 மே 2007] கடந்த மார்ச் மாதம் 14 ஆம் நாள் புங்குடுதீவில் உள்ள கடற் கரைப்குதியில் இராணுவச் சாக்கு ஒன்றிற்குள் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதிகள் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவான வண. ஜிம் பிறவுண் அடிகளினுடையது என மரபணு (DNA) சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை இன்று வியாழக்கிழமை மகரகம மருத்துவனையின் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் பகுதிகளும், ஜிம் பிறவுண் அடிகளாரினது பெற்றோரின் குருதி மாதிரிகளையும் தாம் பெற்றுள்ளதாகவும் விரைவில் மரபணு சோதனை நடத்தப்படும் எனவும் மருத்துவமனையின் சட்டபூவமான அதிகாரி ஒருவர் முன்னர் தெரிவித்திருந்தார். எனினும் தமது முடிவுகளை மருத்துவமனை வட்டாரங்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளிவரும் என யாழ்ப்பாணத்தின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அல்லைப்பிட்டி தேவாலயத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய அருட்தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் (வயது 34), அவரது உதவியாளரான வென்சீஸ்லஸ் வின்சன்ற் விமலன் (வயது 38) ஆகியோர் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் மண்டைதீவில் உள்ள இராணுவத்தின் சோதனைச் சாவடியில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் காணாமல் போயிருந்தனர். இவர்கள், காணமல் போனது தொடர்பான தகவல்களை படைத்தரப்பு வெளியிட வேண்டும் என கோரி யாழ். மக்களாலும், கிறிஸ்தவ மத குருக்களினாலும் பல எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும் இது தொடர்பாக பாப்பரசரின் சிறப்பு பிரதிநிதி யாழ். குடாநாட்டுக்கு பயணம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.