[சனிக்கிழமை, 26 மே 2007]
ஆக்கிரமிக்கப்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையைச் சூழ சிறீலங்காப் படையினரால் 27 படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மட்டக்களப்பின் பிரதான படைமுகாங்களில் இருந்த படையினரில் பெரும்பாலானோர் புதிதாக அமைக்கப்பட்ட படைமுகாங்களில் நகர்த்தப்பட்டுள்ளார்.
27 படைமுகாங்களில் பிரதான முகாங்கள் மற்றும் மினி முகாங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இந்த படைமுகாங்களை பாதுகாக்கும் காவரண்களை படையினர் அவசர அவசரமான அமைந்து வருகின்றனர்.
ஆக்கிரமித்த மக்கள் குடியிருப்புக்களையும் மக்களின் வீடுகளையும் மையப்படுத்தியே இப்படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறீலங்காப் படையினர் தற்பொழுது குடும்பிமலைக் கோட்டப்பகுதியை அண்மித்தே படையினரின் பலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் குடும்பிமலைக் கோட்டம் எனக் கூறப்படும் தொப்பிகல காட்டின் முன்னரங்க நிலைகளில் படையினரின் உடுருவல் அணிக்கும் விடுதலைப் புலிகளின் வேவு அணிக்கும் இடையில் சிறு சிறு மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
படையினரின் முழுப்பலமும் தென்புறம் குறிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பில் உட்பகுதிகள் முழுவதும் படையினரின் பலம் எதுவுமின்றி வெறுமையாகவே காணப்படுவதாகவும் மட்டக்களப்புச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
Saturday, May 26, 2007
ஆக்கிரமிக்கக்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையில் 27 படைமுகாங்கள்.!
Saturday, May 26, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.