[சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2007]
யாழ். அரசாங்க அதிபர் பணிமனையிலிருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ள ஏ-9 வீதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 12.10 மணியளவில் இடம்பெற்றது.
இத்தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.
யாழ். நகரில் நிலைகொண்டுள்ள 51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிக்கேட்டைச் சேர்ந்த இராணுவத்தினரே கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினர் தேடுதல் நடத்தியதுடன், கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினையும் நடத்தியுள்ளனர்.
கிளைமோர் தாக்குதலில் சிக்கி அரியாலையைச் சேர்ந்த ஏ. சித்ரா (வயது 24), கே.மோகன் (வயது 46), இ.ஜேசுதாசன் (வயது 55) ஆகிய பொதுமக்கள் காயமடைந்ததாகவும் காயமடைந்த 5 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த சூரசிங்க (வயது 32), பிரேமதாச (வயது 42) ஆகிய இரு இராணுவத்தினர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Saturday, February 17, 2007
யாழில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல்: 2 பேர் பலி- 12 பேர் படுகாயம்.
Saturday, February 17, 2007





