[சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2007, 19:34 ஈழம்] இந்திய இலங்கை கடற் பரப்பில் அண்மை நாட்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்புடுவதான தோற்ப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் துணை இராணுவக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன கடற்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கடற்படையின் பூரண ஒத்துழைப்பை பெற வேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மைக்காலமாக விடுத்த பாதுகாப்பு ஒத்துழைபபு ஒப்பந்தம் தொடர்பான வேண்டுகோள்கள் இந்திய அரசாங்கல் நிராகரிக்கப்பட்டுள்ளன இதனை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது இதன் ஒரு அம்சமாக ஸ்ரீலங்கா அரசாங்க புலனாய்வு பிரிவால் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுடன் படகுகள் இந்திய கடற்படையினரின் நடமாட்டமுள்ள பகுதிகளுக்கு அனுப்பழி வைக்கப்பட்டு அவற்றை சிக்கவைத்து அந்த படகுகள் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானவை என கருத்துரவாக்கம் ஏற்படுத்தப்படட்டு வருகின்றது இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அண்மை நாட்களில் விடுதலைப்புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஆதரவாக தோன்றி வரும் நிலைப்பாட்டை குழப்புவதற்கும் இந்தியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தவதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தீவிர முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்புடும் என புலனாய்வு நடவடிக்கைகள் ஊடாக இந்தியாவை நம்பவைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச போரியல் விவகாரம் தொடர்பான ஆய்வாளார் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார் இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் சில தாக்குதல்களை ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு நடத்தலாம் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார் இந்த தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணா குழுவினரை ஸ்ரீலங்கா அரசாங்கம் பயன்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனார்





