Wednesday, January 31, 2007

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் தொலைபேசி சேவைகள் செயலிழப்பு


நேற்று முன்தினம் இரவு முதல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கான தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளதாக கொழும்பிலுள்ள சிறீலங்கா ரெலிகொம் தலை மையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளமைக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என தெரிவித்த அதிகாரிகள் மேலதிகமாக எதனையும் கூறவில்லை. அதேவேளை மேற்படி இடங்களுக்கான தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துள்ளமை தொடர்பாக தலைமை அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதாக சிறீலங்கா ரெலிகொம்மின் வவுனியா அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.