புதன்கிழமை, 31 சனவரி 2007
காலியில் இடம்பெற்ற சர்வதேச நிதிவழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பையடுத்து, சில முக்கிய தகவல்கள் மற்றும் செய்திகளோடு, சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சி பயணமாகியுள்ளனர்.
அவர்கள் கிளிநொச்சி செல்வதற்கான உலங்குவானூர்தி ஒழுங்குகளை, நேற்று இரவு வரை சிறீலங்கா அரசு வழங்கவில்லை. இருப்பினும் தாங்கள் தரை மார்க்கமாகவாவது கிளிநொச்சி செல்லவுள்ளதாக கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.
வேறு வழியின்றி, விமானப் பயணத்தை வழங்க சிறீலங்கா அரசு பின்னிரவு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, இடைக்கால தலைவராகப் பணியாற்றிவரும் ஜோண் ஒஸ்க்கார் சோல்நெஸ் தலைமையில், இவர்களது பயணம் இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை எட்டவேண்டுமென்றும், சிறீலங்கா அரசு இராணுவத் தீர்வை இடைநிறுத்தவேண்டுமென்றும் நிதி வழங்கும் நாடுகள் பொதுவான வேண்டுகொளை விடுத்த போதிலும், சிறீலங்கா அரசின் இராணுவ நகர்வுகளுக்கு தொடர்ந்தும் தங்களது ஒத்துழைப்பு இருக்குமென அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
Wednesday, January 31, 2007
கண்காணிப்புக் குழுவினர், கிளிநொச்சிக்கு இன்று திடீர் பயணம்
Wednesday, January 31, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.