Tuesday, January 23, 2007

வடமராச்சி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் !!!

வடமராச்சி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை முதல் 15000 க்கு மேற்பட்ட வடமராச்சிப்பகுதி மாணவர்கள் அண்மையில் கடத்தப்பட்ட ஹட்லிக்கல்லூரி, வேலாயுத மகாவித்தியாலய மாணவர்களை விடுவிக்கக் கோரி காலவரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டள்ளார்கள். ஹட்லிக்கல்லூரி மாணவன் பிரகலாதன், மற்றும் nஐகன் வேலாயுத மகாவித்தியாலய மாணவன் ஆகியோர் அண்மையில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டமை தெரிந்ததே. கடந்த ஒருவாரமாக மாணவர்கள் போராட்டங்கள் நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடமாராச்சி மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இம்மாணவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதவிடத்து அனைத்து அரசஅலுவலகங்களின் நடவடிக்கைகளும் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் மாணவர்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கும், கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கும் பாடசாலைகளை திந்திருக்குமாறு விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார்கள். இதேவேளை பெருமளவிலான இராணுவத்தினர் இப்பாடசாலைகளின் முன் நிலைகொண்டுள்ளதாக மேலும் அறியமுடிகிறது. பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும், மாணவர்கள் எவரும் இன்றி பாடசாலைகளில் காலை இருந்து மதியம் 2 மணிவரை வேலையில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.