[Saturday January 27 2007] அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் கிளைமோர் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் அண்மையில் கைவிடப்பட்ட பகுதியில் நிலைகொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினருக்கு வழங்கல் பணியினை மேற்கொண்ட அதிரடிப்படையினரின் வாகனமே தாக்குதலில் சிக்கியதாகவும் தாக்குதலை விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணி நடத்தியதாகவும் திருக்கோவிலில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலை அடுத்து அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூட்டையும், எறிகணை வீச்சுக்களையும் சரமாரியாக நடத்தினர்.
Saturday, January 27, 2007
திருக்கோவிலில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்: 8 பேர் பலி- 12 பேர் படுகாயம்.!!
Saturday, January 27, 2007





