காலில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சிறீலங்காவிற்கு 2007-2009 ஆண்டுகால அபிவிருத்தி பணிகளுக்கு 4.5 பில்லின் அமெரிக்க டொலர் உதவி பெறப்படவுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ் உதவித்தொகையானது வீதி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகளின் உருவாக்கம், துறைமுக மேம்பாடு, அனல்மின் நிலையம் உருவாக்கம் ஆகிய பணிகளுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளின் பெறுபேறாக எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 9 பில்லியன் டொலர் பணம் உதவித்தொகையாக சிறீலங்கா அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் என அமைச்சர் சரத் அமுனுகம நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை ரொட்ரர் செய்தி நிறுவனத்துக்கு செவ்வியளித்த பெயர் குறிப்பிடவிரும்பாத வெளிநாட்டு அபிவிருத்திப் பங்காளி ஒருவர் இது உதவிவழங்கும் மாநாடு அல்ல எனவும் ஒருவரும் உதவியளிப்பதற்கான எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
Tuesday, January 30, 2007
காலி மாநாட்டில் 4.5 பில்லியன் டொலர் உதவிவழங்கப்படுமா என்பதில் முரண்பாடான தகவல்கள்
Tuesday, January 30, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.