Friday, December 29, 2006

வடக்குகிழக்கு பிரிப்பு - தமது பணிகளுக்கு பாதிப்பு ..

வடக்குகிழக்கு பிரிப்பு - தமது பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு வடக்குகிழக்கு இணைப்பை பிரிக்கும் நடவடிக்கைகள் காரணமாக தமது பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக விரைவில் கொழும்பில் கூடவுள்ளதாக குழுவின் பதில் பேச்சாளர் டோரி ஸ்டேஜோரி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு வடக்குகிழக்கு மாகாணத்திற்கென பொதுவான பணித்திட்டங்களை மேற்கொண்டு வந்தது. எனினும் வடக்குகிழக்கு பிரிப்பின் பின்னர் இந்த திட்டங்களை மேற்கொள்வதில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் திருகோணமலையில் பணியாற்றிய போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள் ஏற்கனவே கொழும்பு தலைமையகத்திற்கு திரும்பியுள்ளனர். கிளிநொச்சயில் உள்ள போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவினர் இன்று கொழும்புக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்குகிழக்கு பிரதேசங்களி;ல் போர் நிறுத்தக்கண்காணிப்பு பணிகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன. கிழக்கில் தனித்து செயற்படும் போது கருணா கூலிக்குழுவின் செயற்பாகள் கிழக்கில் அதிகரித்துள்ளமையும் இந்த தடைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.