Friday, December 29, 2006

தீர்வு யோசனை முன்வைக்கப்படும் - ஐக்கிய தேசியக் கட்சி

ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் தீர்வு யோசனை முன்வைக்கப்படும் - ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தமது யோசனைகளை அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு சமர்பிக்கவுள்ளது. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அனைத்து கட்சி மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது. இதன்போது தமது கட்சி டோக்கியோ மற்றும் ஒஸ்லோ பிரகடனங்களின் அடிப்படையில் யோசனைகளை முன்வைக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க தெரிவித்தார். எனினும் இந்த யோசனைகளில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை. இதேவேளை ஏற்கனவே நிபுணர் குழவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகளை தமது கட்சி வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.