Thursday, November 30, 2006

மக்கள் கருத்துகணிப்புக்கு இந்தியா அழுத்தம்...

மக்கள் கருத்துகணிப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் - டாக்டர் ராமதாஸ் இன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்தியா அரசு சிறிலங்காவில் தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்கள் தனியரசு அமைத்து பிரிந்த செல்வதற்குரிய மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார். அவர் பத்திரிகையாளர்களிடம் மேலும் கருத்து தெரிவிக்கையில் சிறீலங்கா தொடர்பில் இந்திய அரசு இலங்கை சார்பில் அதனது வெளியுறவுக் கொள்கையை முற்றுமுழுதாக மாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா இலங்கை தமிழர்களது நிலமைகளை புரிந்துகொள்ள வேண்டும். அவர் இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்கள் உணர்வுகளை மத்தியில் கொள்கை வகுப்பவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என சாடியுள்ளார்.