யாழ் மத்திய பேரூந்து நிலையம் இடமாற்றம் - இராணுவத தலையகம் அறிவிப்பு. நாளை முதல் யாழ்பாணத்தின் புதிய பேரூந்து நிலையமாக முச்சவெளியை அண்டிய பண்ணை பகுதியில் செயல்படும் என யாழ்மாவட்ட இராணுவ தலைமையகம் இன்று 29ம் திகதி அறிவித்துள்ளது. எனினும் இவ் ஏற்காட்டுக்கான காரணங்களை இராணுவத்தினர் வெளியிடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்படி தனியார் பேரூந்து தரிப்பு நிலையங்கள் மற்றும் வடபிராந்திய போக்குவரத்து சபை பேரூந்துகளது தரிப்பிடங்கள் பண்ணை பகுதிகளிலேயே அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை ஏற்கனவே யாழ் நகரின் ஸ்டேன்லி வீதி மற்றும் பருத்திதுறை வீதி ஆகிய போக்குவரத்து வீதிகளில் வாகனங்கள் செல்வது தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது





