சுவிஸ்சாலந்து பேச்சுக்கள் எந்த முடிவுகளும் இன்றி படுதோல்வியில் முடிவடைந்துள்ளன. சுவிஸ்சாலந்து பேச்சு வார்த்தைகள் முடிவுகள் எதுவும் இன்றி படுதோல்வியில் முடிவடைந்துள்ளன மக்களின் மனிதபிமான பிரச்சினையான ஏ 9 பாதை திறந்து விட்டலே அடுத்த பேச்சிற்கான திகதியை விடுதலைப்புலிகள் அறிவிப்பார்கள் என அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் 6லட்சம் மக்களது மனிதபிமான பிரச்சினையான ஏ 9 பாதையை சிறீலங்கா அரசு திறக்க மறுத்துள்ளது இது ஒரு யுத்த நிறுத்த மீறல் என்பதுடன் மனித உரிமை மீறலும் கூட அத்துடன் எந்தவித விட்டுக் கொடுப்புகளிற்கும் சிறீலங்கா அரசு தயாராக இல்லை இந் நிலையில் அடுத்த கட்ட பேச்சுக்களை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை எனவே ஏ 9 பாதையை திறந்து தனது ஆக்கிரமிப்பு யுத்த முன்னெடுப்புக்களை நிறுத்தி நல்லொன்ன நடவடிக்கையை வெளிபடுத்திய பிறகே அடுத்த கட்ட பேச்சுக்களிற்கான திகதியை தீர்மானிப்பது பற்றி சிந்திக்க முடியும். தற்போது உள்ள நிலையில் ஓரு யுத்தம் வெடிக்கும் நிலையில் உள்ளது அவ்வாறு ஒரு யுத்தம் ஏற்பாட்டால் அதன் விளைவுகள் உங்களது பதில் தாக்குதல்கள் எவ்வாறு அமையும் என செய்தியாளர் கேட்டதற்கு பதில் அளித்த தமிழ்ச்செல்வன் அவ்வாறு ஒரு யுத்தம் தமிழ் மக்கள் மீது அரசு திணித்தால் அதனை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர் என தமிழ்செல்வன் பதில் அளித்தார்.





