வவுனியாவில் சிறீலங்கா படையினர் மீது கிளைமோர் தாக்குதல் 3காவல்துறையினர் காயம். வவுனியா வேப்பங்குளத்தில் வீதி சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா காவல்துறையினரை இலக்கு வைத்து இன்று சனி காலை கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இக் கிளைமோர் தாக்குதலில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை நேற்று வெள்ளி காலை யாழ் ஆவரங்கால் பகுதியில் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒரு சிறீலங்கா இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது





