அனுராதபுரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தல் - கிங்ஸ்லி ஏக்கநாயக்கா அனுராதபுர மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அநுராதபுர பிரதி காவல்துறை அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டம் முதலில், அனுராதபுர காவல்துறை பிரதேசத்தில் அமுல் படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினரது மோட்டார் சைக்கில் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு, ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.





