Tuesday, September 26, 2006

இனப் பாகுபாடின்றி சகலருக்கும் சேவை செய்வேன் - பிரதி பொலிஸ் மா அதிபர் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பாகுபாடின்றி சகலருக்கும் சமமான வகையில் தாம் சேவை செய்வேன் என பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் கருணாரத்ன தெரிவித்தார். புத்தளத்திற்கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக கடமைகளை உத்தியோபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் நாட்டில் காணப்படும் பல விதமான பிரச்சனைகளுக்கு மத்தியில், குற்றச் செயல்களும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.