Saturday, September 30, 2006

அரசியல் தீர்வை வலியுறுத்தி நீர்கொழும்பில் பேரணி. நாட்டின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சனிக்கிழமை நீர்கொழும்பில் சர்வமதப் பிரார்த்தனையும் பேரணியும் கூட்டமும் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு புனித மரியாள் தேவாலயத்தில் இருந்து பகல் 2 மணிக்கு பேரணி புறப்பட்டு நகரின் ஊடாக மாநகர மண்டபத்தை வந்தடைந்துள்ளது. அதன் பின்னர் பிரார்த்தனைகளும் கூட்டமும் நடைபெறும். இதில் நான்கு மதங்களின் பெரியார்கள், மதகுருமார்கள் பங்கு பெற்றார்கள். பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் இப்பேரணியில் கலந்துகொண்டனர். இதேவேளை, யுத்தம் வேண்டாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண் என்ற சுவரொட்டிகள் நீர்கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள் எவருமே பங்குபற்ற மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.